திருவருகைக்கால முதல் ஞாயிற்று விழாவுக்கு முந்திய நாள் மாலையில் திருத்தந்தையின் மறையுரை
.301108 .
இன்றைய மாலை வழிபாட்டோடு திருவருகைக் கால புதிய வழிபாட்டு ஆண்டை நாம் தொடங்குகிறோம்
. திருவருகைக்காலத்தில் நம்பிக்கை ஒளி வீசுகிறது . நம்முடைய வழிபாடுகளும் நம்பிக்கையைத்
தெரிவிக்கின்றன . நமமைத் தேடி கடவுள் வரும் நேரம் இது . திருப்பாடல் 141 இல் முதல் 2
வசனங்களில் நாம் இறைவனின் வருகைகக்காக மக்கள் ஏங்குவதைப் பார்க்கிறோம் . – ஆண்டவரே நான்
உம்மை நோக்கிக் கதறுகிறேன் .விரைவாய் எனக்குத் துணை செய்யும் . உம்மை நோக்கி நான் வேண்டுதல்
செய்யும்போது என் குரலுக்குச் செவி சாய்த்தருளும் .தூபம் போல் என் மன்றாட்டு உம் திருமுன்
ஏற்றுக் கொள்ளப்படுவதாக . மாலைப் பலி போல என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக என்கின்றன.
இவ்வாறு திருவருகைக் காலத்தின் முதல் மாலை வழிபாடு புதுப் பொலிவுள்ள செபத்தோடு தொடங்குகிறது
. மிகப் பெரிய ஆபத்திலிருந்து தன்னைக் காக்குமாறு கதறுவதை முதல் வசனம் காட்டுகிறது .
திருச்சபையும் அதைச் சுற்றியுள்ள பல படுகுழிகளிலிருந்து காக்கப்படவேண்டும் . தீமையை எதிர்க்க
விரும்பும் நல்லோர் அனைவருடைய குரலையும் நாம் இங்கு கேட்கிறோம் . நீதி மறுக்கப்படுபவர்களுடைய
குரலும் , மனித மாண்புக்கு ஒவ்வாத இன்பங்களுக்கு எதிராக , ஏழைகளின் நிலைமைக்கு எதிராக
குரல் எழும்புகிறது . திருவருகைக் காலத்தின் தொடக்க வழிபாடு இந்த அபாயக்குரலை எழுப்புகிறது
. இது தூபம் போல கடவுள் திருமுன் எழுகிறது . கடவுளிடம் நாம் பொருட்களை அல்ல , நம் ஆன்மாக்களைக்
எழுப்புகிறோம் . புதிய உடன்படிக்கையில் குருவும் பலியுமாகிய கிறிஸ்துவோடு இணைந்து நாம்
நம் செபங்களை எழுப்புகிறோம் . கிறிஸ்துவின் மறையுடலின் செபம் நம் மனித வாழ்வினையும் அதன்
சோதனைகளையும் தம்மேல் சுமந்து வெற்றி கண்ட அதன் தலையாகிய இயேசுவின் வழியாகத் தந்தையாகிய
கடவுளுக்குக் காணிக்கையாக்கப்படுகிறது . திருப்பாடல் வரிகள் நம்மைத் தவறான நம்பிக்கைகளிலிருந்து
அகற்றி கடவுள்மீது நம் நம்பிக்கையை வைக்கத் தூண்டுகின்றன . நாம் நம் அன்னை மரியாவோடு
இணைந்து நமக்காகப் பாடுபட்டு உயிர்த்த இயேசுவினை நோக்கிச் செல்வோம் . நமது கரங்களை அவருடைய
கரங்களோடு இணைத்து மகிழ்ச்சியோடு பயணம் செல்வோம் . அன்னை மரியின் மன்றாட்டுக்களோடும்
, தூய ஆவியானவரின் அருள் துணையோடும் திருச்சபை மனுக்குலம் அனைத்துக்கும் நம்பிக்கையின்
அடையாளமாக விளங்கட்டும் எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மறையுரை வழங்கினார் .