இலங்கை அரசு அதன் இராணுவம் வெற்றிபெற்றுள்ளாதாக நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் கனவு
உலகத்தில் இருக்கிறார்கள் எனவும் அவர் வர்ணித்துள்ளார். ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கும்
அவரது உரையில் விடுதலைப்புலிகளின் தளபதி பிரபாகரன் இலங்கை அரசு கனவுலகிலிருந்து விழித்தெழும்
நாள் விரைவில் விடியலைக் காணும் எனத் தெரிவித்துள்ளார் . கிளிநொச்சியைப் பிடிக்க உள்ளதாக
இராணுவம் கூறிக்கொண்டிருக்கும் அதே வேளையில் பிரபாகரன் துணிச்சலாகச் சூளுறை வழங்கினார்
. இராணுவத்தின் பிரதிநிதி கேலிய ராம்புக்குவெல்லா என்பவர் பிரபாகரன் மரணப்படுக்கையில்
இருந்து கதறுவதாகக் கூறியுள்ளார் .தமிழ் மக்களுக்கு தீமை விளைப்பைதைத் தவிர்க்குமாறு
அவர் பிபிசி வழியாகத் தெரிவித்துள்ளார் . புலிகள் தலைவர் பேசமுடியாதவாறு ஊடகங்களை இலங்கை
ராணுவம் தாக்குதல் நடத்தியும் பிரபாகரனின் வீர உரைகள் வானில் வலம் வந்தன . அரசு ராணுவ
முடிவை விரும்புவதாகப் பிரபாகரன் தெரிவித்து , எத்தனை தடைகள் எதிர் வந்தாலும் பல நாடுகள்
அரசுக்கு உதவிவந்தாலும் புலிகள் அஞ்ஞாது தமிழினப் பாதுகாப்புக்காகப் போரிடுவோம் எனத்
தெரிவித்துள்ளார் .