சூரிய ஒளியிலிருந்து மின் சக்தி தயாரிக்கும் வத்திக்கானுக்கு விருது .27 , நவம்பர் ,08
.
இம்மாதம் 26 ஆம் தேதி வத்திக்கானில் சூரிய ஒளியிலிருந்து மின் சக்தி தயாரிக்கும் எந்திரம்
வத்திக்கானில் நிறுவப்பட்டது . திருத்தந்தை இதனை இப்புதனன்று திறந்து வைத்தார் . புதுப்பிக்கப்படத்தக்க
சக்தியைத் தயாரிப்பதற்காக ஐரோப்பியக் குழுமத்தின் தலைவர் ஹெர்மன் ஷீயர் வத்திக்கானுக்கு
பாராட்டுப் பரிசு வழங்கினார் . வத்திக்கான் நிலப்பரப்புக்கு அதிகாரியான கர்தினால் ஜொவான்னி
லஜோலோ வெள்ளியினால் செய்யப்பட்ட உலக உருண்டைப் பரிசைப் பெற்றுக்கொண்டு அதைத் திருத்தந்தையிடம்
கொடுக்கவுள்ளதாகக் கூறினார் . திருத்தந்தை இயற்கையைப் போற்றிக் காக்குமாறு அடிக்கடி வலியுறுத்தியதாகக்
கர்தினால் லஜோலோ தெரிவித்தார் .