ஈராக்கிய கிறிஸ்தவ மக்கள் மோசூலில் நடக்கும் வன்முறையால் அதிர்ச்சி,27,நவம்பர் ,08.
ஈராக்கிய கிறிஸ்தவ மக்கள் மோசூலில் நடக்கும் வன்முறையால் அதிர்ச்சியடைந்திருப்பதாக அங்குள்ள
கல்தேய ஆயர் ,ஷெல்மன் வார்துணி கூறினார் . இப்புதனன்று திருத்தந்தையை அவர் சந்தித்தார்
. இது பற்றிக்கூறிய திருத்தந்தை ஈராக் எப்பொழுதும் எங்கள் மனதுக்குள் இருக்கிறது . நாங்கள்
தொடர்ந்து ஈராக்கின் கிறிஸ்தவர்களுக்காகச் செபித்துக் கொண்டிருக்கிறோம் எனக் கூறியுள்ளார்
.
ஈராக் அரசு பாதுகாப்புக் கொடுப்பதாக உறுதிமொழி கூறியதன் பேரில் அக்டோபர் மாதம்
ஈராக்கைவிட்டு வெளியேறிய 2500 குடும்பங்களில் 800 குடும்பங்கள் மோசூலுக்குத் திரும்பியுள்ளதாக
வத்திக்கான் வானொலிக்குக் கொடுத்த பேட்டியில் ஆயர் ஷெல்மன் கூறியுள்ளார் .