2008-11-26 15:58:38

இந்தியாவில் இடம் பெறும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்பட அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ சபைகள் அழைப்பு


நவ.26.,2008 இந்தியாவில் இடம் பெறும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவசபைத் தலைவர்கள் அதிபர் புஷ்க்கும் அவரது நிர்வாகத்திற்கும் திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ள சமய சுதந்திரத்தை வலிந்து செயல்படுத்துவதற்கு அதிபர் புஷ், பிரதமர் மன்மோகன்சிங்கை வலியுறுத்துமாறு அக்கடிதம் கூறுகிறது.

இவ்விவகாரத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு தனது தூதரக அதிகாரத்தின் மூலம் இந்திய அரசை வலியுறுத்துமாறு அக்கடிதம் கோருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ சபைகள், நசுக்கப்படும் திருச்சபைகளுக்கான சர்வதேச செப நாளை ஞாயிறன்று கடைபிடிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.