ஆர்மீனியாவின் முதலாம் ஆராம் உரோமைக்கு வருகை தருகிறார். 231108.
சிலிசியாவின் ஆர்மீனிய கத்தோலிக்கோஸ் முதலாம் ஆராம் இம்மாதம் 23 லிருந்து 27 வரை உரோமையில்
பயணம் மேற்கொள்ளவிருப்பதாக வத்திக்கான் திருப்பீடத்தின் நேர்முக உதவியாளர் மேதகு எலுத்தெரியோ
போர்த்தீனோ தெரிவித்துள்ளார் . அவர் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டைச் சந்திக்க உள்ளார்
. கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிக் கலந்து பேசுவார்கள் எனத் தெரிகிறது. எனவே இது முக்கியமான
கலந்துரையாடல் என மேதகு எலுத்தெரியோ கூறியுள்ளார் . இத்திங்கள் 24 நவம்பர் காலை திருத்தந்தை
தமது அப்போஸ்தலிக்க இல்லத்தில் அவரையும் , உடன் வந்திருப்போரையும் வரவேற்றுப் பேசுவார்.
மாலையில் கத்தோலிக்கோஸ் முதலாம் ஆராம் திருத்தூதர் பவுல் பசிலிக்காவுக்குச் செல்வார்.
முதலாம் ஆராமுடன் 6 பேராயர்களும் , 2 ஆயர்களும் , 3 உதவியாளர்களும் வந்துள்ளனர் .