புனித மைக்கிள் புரோ , குரு, மெக்சிக்கோ நாட்டு மறைசாட்சி . இயேசு சபைத் துறவி .கி.பி.
1891-1927.
தமது நெஞ்சைக் குண்டுகள் துளைத்தபோது “கிறிஸ்து அரசரே வாழ்க” என்று சொல்லி தம் உயிரை
நீத்தவர் புனித மைக்கிள் புரோ . இவர் இயேசு சபையில் சேர்ந்த நாட்களில் மெக்சிக்கோவிலும்
அதன் சுற்றுப்புரங்களிலும் கத்தோலிக்க மறைக்குக் கொந்தளிப்பான காலமாக இருந்தது. இயேசு
சபையில் சேர்ந்த இவர் தொடக்க முதல் ஒரு புனிதராக வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டார்
.பல இன்னல்களுக்கும் , வேதனையான பயணங்களுக்கும் பின் பெல்ஜிய நாட்டில் லூவெயின் நகரில்
மறையியல் கற்றார் . கி.பி. 1925 இல் குருப்பட்டம் பெற்றார் .தாயகம் திரும்பினார் . மெக்சிக்கோவில்
திருச்சபையின் நிலைமை மோசமாகியிருந்தது . இருப்பினும் மறைந்து வாழ்ந்த கத்தோலிக்கர்களிடம்
இடம் அறிந்து மறைவாகச் சென்று அருள்சாதனங்களை வழங்கி கிறிஸ்தவர்களைப் பல வகைகளிலும் புரோ
ஊக்குவித்து வந்தார் .இவரது உடன்பிறந்த சகோதரர்கள் ஹம்பர்ட் , ராபர்ட் இருவரும் தந்தை
புரோவுக்கு வலக்கையாக அமைந்து உதவினர் .
நவம்பர் 23 , 1927 இல் இவரை
போர்வீரர் சுடுவதற்குத் தயாரானபோது இவர் செபித்துக் கொண்டே ,புன்முறுவலுடன் தம் இரண்டு
கைகளையும் சிலுவை அடையாளமாக விரித்து வைத்த நேரம் குண்டு அவரது இதயத்தைத் துளைத்தது.
சாவினை சிரித்துக் கொண்டே வரவேற்றவர் தூய மைக்கிள் புரோ.