பிறரன்பு செயல்களைச் செய்வதில் ஆயர்கள் தலைவர்களாகச் செயல்பட அழைப்பு - கர்தினால் யோசப்
ஹோர்டஸ்
நவ.22,2008. பிறரன்புச்செயல் பணிகளை மற்றவர்களின் பொறுப்பில் அதிகம் விட்டுவிடாமல் அவற்றில்
ஆயர்கள் ஆக்கப்பூர்வமான தலைவர்களாகச் செயல்படுவது இன்றியமையாதது என்று கோர் ஊநம் என்ற
திருப்பீட நற்பணிகள் அவைத் தலைவர் கர்தினால் பவுல் யோசப் ஹோர்டஸ் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க
ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு அந்நாட்டின் நிவாரண அமைப்புகளின்
தலைவர்களையும் சந்தித்துத் திரும்பிய கர்தினால் யோசப் ஹோர்டஸ் வத்திக்கான் வானொலிக்கு
அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
பிறரன்புச்செயல்களும் ஓர் அங்கமாக இருக்கின்ற
நற்செய்திப் பணியைப் பொறுத்தவரையில் ஆயர்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டியது
அவசியம் என்றும் அவர் கூறினார்.
பிறரன்புச் செயல்கள் திருச்சபை பணி என்பதால் ஆயர்கள்
அப்பணிகளுக்கு முழுவதுமாக மற்றவர்களை நியமிக்க முடியாது என்றும் கர்தினால் யோசப் ஹோர்டஸ்
கூறினார்.