புலம்பெயர்வோர் , குடியேற்றதார்கள் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து கல்வி பயிலவரும்
மாணவர்கள் பற்றிய கருத்தரங்கு இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடக்கிறது . அங்கு உரை
நிகழ்த்திய வத்திக்கான் திருப்பீடத்தின் குடியேற்றதாரர்கள் மற்றும் புகலிடம் தேடுவோருக்கான
மன்றத்தின் தலைவர் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ பேசுகையில் 2 கோடிக்கும் மேற்பட்டோர்
இன்று புலம்பெயர்ந்துள்ளார்கள் . இது சமுதாயத்தின் அமைப்பையே மாற்றுகிறது , பல தரப்பட்ட
சமூக , கலாச்சார , அரசியல் , பொருளாதார, சமய, ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது . அம்மக்களுக்கு
உதவிசெய்திடுவது நமது கடமையாக அமைகிறது என்றார் . இதுபற்றித் தெளிவுற பல கோணங்களில் விளக்கிக்கூறிய
பேராயர் மார்க்கெட்டோ , புலம் பெயரும் மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது
திருச்சபையின் பிறர் அன்புச் சேவை எனக் கூறினார் . இதை 1981 இல் முந்நாள் திருத்தந்தை
2 ஆம் ஜான்பால் திருச்சபையின் முக்கியப் பணி எனத் தெரிவித்ததை மேற்கோள் காட்டினார் .
அவர்களுடைய பொருளாதாரப் பிரச்சனையையும் ,ஆன்மீகத் தேவைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்
எனத் திருத்தந்தை 2ஆம் ஜான்பால் கூறியிருந்தார் . எனவே இரண்டையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்
என்றார் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ .