2008-11-21 20:38:42

ஈராக்கின் மோசூலில் கொல்லப்பட்ட சகோதரிகளின் தாயும் தாக்குதல் காரணமாக இறந்துள்ளார் .21,நவம்பர்,08 .


இம்மாதம் 12 ஆம் தேதி மோசூலில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர் . அதுபோது அங்கு லாமியா, வாலா என்ற பெயர் கொண்ட இரண்டு கிறிஸ்தவச் சகோதரிகளும் , அவர்கள் தாயாரும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள் . இரண்டு சகோதரிகளும் உடனே இறந்துவிட்டார்கள் . அவர்களின் தாயார் செல்மா ஜியார்ஜிஸும் இறந்துவிட்டதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது . அவர் இம்மாதம் 19 ஆம் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . வீட்டின் தலைவரும் , ஒரு மகனும் வெளியேறிவிட்டதால் தப்பித்துக் கொண்டதாகத் தெரிகிறது . பாதுகாப்பான குடியிருப்புப் பகுதிகளில் இது நடந்துள்ளதால் , இந்நிகழ்ச்சி அங்குள்ள மக்கள் மனத்தில் மிகுந்த அச்சத்தைக் கொடுத்துள்ளது . மோசூல் கிறிஸ்தவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன .








All the contents on this site are copyrighted ©.