ஒரிசாவில் கற்பழிக்கப்பட்ட அருள் சகோதரியின் வாக்குமூலம்.20,நவம்பர்,08.
ஒரிசாவில் தீவிரவாதக் கும்பலால் ஆகஸ்ட் மாதம் கற்பழிக்கப்பட்ட அருள் சகோதரி விசாரணைக்
குழுவிடம் வாக்கு மூலம் கொடுத்தார் . ஒரிசாவுக்குச் சென்று அங்குள்ள காவலர்கள் முன்னிலையில்
குற்றவாளியை அடையாளம் காட்டி உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டார் . ஒரிசாவின் நம்பமுடியாத
காவலர்களுக்கிடையே செல்வது பாதுகாப்பு இல்லாதது என அருள் சகோதரி மீனா பார்வா கூறிவிட்டார்
. அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கற்பழிக்கப்பட்டபோது , காவலர்களுக்குத் தெரிந்திருந்தும்
காப்பாற்றத் தவறிவிட்டார்கள் என்றும் , குற்றத்தை மறைக்க முயன்றனர் என்றும் விசாரணைக்குழுவிடம்
கூறியுள்ளார்.