உலக மயமாக்குதல் பற்றிக் கர்தினால் பெர்த்தோனேயின் நூல். 20,நவம்பர்,08.
வத்திக்கான் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள “திருச்சபையின் சமூகக் கொள்கைத் திரட்டு நூலில்
பொது நன்மைக்கான நன்னெறிகள்” , என்ற இந்த நூலுக்கு இரஷ்ய ஆர்த்தோடாக்ஸின் பிதாப்பிதா
மெட்ராபோலிட்டன் கிரில் முன்னுரை வழங்கியுள்ளார் . இந்நூல் பற்றி ஆக்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள
மதிப்புரையில் கர்தினால் பெர்த்தோனே உலகமயமாக்குதல் பற்றி ஆக்கப்பூர்வமாக கருத்து வழங்கியுள்ளதாகத்
தெரிவித்துள்ளது . உலகமயமாக்குதலின் வேகமான வளர்ச்சி காரணமாக உருவாகியுள்ள சவால்கள் பற்றியும்
, பொருளாதார உலகமயமாக்குதலால் வரக்கூடிய பயன்கள் பற்றியும் அழுத்தமாக நூலில் எழுதியிருப்பதாகக்
கூறுகிறது ஆக்டன் நிறுவனம்