ஈராக்கைவிட்டு கிறிஸ்தவர்களை வெளியேறுமாறு கூறுகிறது அல்கொய்தா. 20, நவம்பர் ,08 .
அல்கொய்தா குழுவினரோடு தொடர்புடைய ஒரு இஸ்லாமியக் குழு , பாக்தாத் நகரைவிட்டு கிறிஸ்தவர்கள்
வெளியேறவேண்டும் எனக் கூறியுள்ளது . இஸ்லாமியர் அல்லாத கிறிஸ்தவர்கள் அங்கு தொடர்ந்து
தங்கினால் அவர்கள் கழுத்து அறுக்கப்படும் எனவும் , மோசூலில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டது
ஒரு பாடமாக இருக்கட்டும் என்றும் அச் செய்தி கூறுகிறது . ஒரு கிறிஸ்தவ ஆயருக்கு அனுப்பட்டுள்ள
இச்செய்தி அராபிக் மொழியில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .