2008-11-18 14:21:30

பெந்தகோஸ்து கிறிஸ்தவ சபை ஆலயத்தையும் அதன் பாஸ்டரையும் தாக்கியவர்களைக் கைது செய்யுமாறு கிறிஸ்தவ தலைவர்கள் வற்புறுத்தல்


நவ.18,2008. இந்தியாவின் மும்பையில் பெந்தகோஸ்து கிறிஸ்தவ சபை ஆலயத்தையும் அதன் பாஸ்டரையும் தாக்கியவர்களைக் கைது செய்யுமாறு கிறிஸ்தவ தலைவர்கள் காவல்துறையை வற்புறுத்தியுள்ளனர்.

இந்து தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படும் 30, 40 பேர் கொண்ட கும்பலானது, கடந்த சனிக்கிழமையன்று பயாந்தார் கடவுளின் சபை செபக் கூடத்தைச் சேதப்படுத்தி பாஸ்டர் பிலிப் பெர்னாடைஸை அடித்துச் சென்றுள்ளது.

இதற்கிடையே குற்றும் சாட்டப்பட்ட 25 பேரில் 5 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளதாக யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், கீக்களூர் கிராமத்தில் 2 அடி உயர மாதா திருவுருவச் சிலையும் விழுப்புரம் மாவட்டம், வேலந்தாங்கல் கூட்சாலையில் வைக்கப்பட்டிருந்த அந்தோணியார் திருவுருவச் சிலையும் உடைக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.