தூய பேதுரு பசிலிக்கா வளாகத்துக்கு வெளியே திருத்தந்தை பெயரில் நூலகம். 18 , நவம்பர்
,08 .
பல வகையான சிந்தனைகளும் பரிமாறப்படும் உலகில் கத்தோலிக்கத் திருச்சபையின் சரியான கொள்கைகளை
மக்களுக்குக் கொடுக்க நல்ல நூலகம் தேவை என்கிறார் வத்திக்கான் திருப்பீடச் செயலர் கர்தினால்
தார்சீசியோ பெர்த்தோனே . தூய பேதுரு பசிலிக்கா வளாகத்துக் சற்று வெளியே திருத்தந்தை 16
ஆம் பெனடிக்ட் பெயரில் இவ்வாரம் செவ்வாய்க்கிழமை அகில உலக நூலகம் திறந்து வைக்கப்பட்டது
. திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் எழுதிய நூல்களும் , பிற சிறந்த நூல்களும் அங்கு விற்பனைக்குத்
தயாராக உள்ளதாகக் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே நூலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய
போது கூறினார் . திருத்தந்தை கூறுவது போல , முடிவில்லாக் காலத்துக்கும் இறைவாக்கில்
நிறைந்திருக்கும் உண்மையை மக்களுக்கு இந்த நூலகம் வழங்கும் என்று கர்தினால் தார்சீசியோ
பெர்த்தோனே கூறினார். இறைவாக்காகிய இயேசுவைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள ஆலயங்களுக்கு
அருகே நல்ல கத்தோலிக்க நூலகங்கள் தேவை எனக் கர்தினால் பெர்த்தோனே மேலும் கூறினார் .