நவ.17,2008. இந்தியாவின் முதல் பெண் புனிதை அல்போன்சாவை கவுரவிக்கும் விதமாக நேற்று புதுடெல்லியில்
தபால்தலை ஒன்று வெளியடப்பட்டது.
புதுடெல்லியில் பத்து ஆயர்கள், நூற்றுக்கணக்கான
குருக்கள் மற்றும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்ட திருப்பலி,
அதன் பின்னான செப ஊர்வலம் ஆகியவற்றின் இறுதியில் டெல்லி தலைமை தபால் நிலைய பொறுப்பாளர்
பி.கே. கோபிநாத் 15 ரூபாய் மதிப்பிடப்பட்ட புனிதை அல்போன்சா தபால்தலையை வெளியிட உச்சநீதிமன்ற
நீதிபதி சிரியாக் ஜோசப் பெற்றுக் கொண்டார்.
டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ
உட்பட பத்து ஆயர்கள் கலந்து கொண்ட புனிதை அல்போன்சா பெயரிலான திருப்பலியை ஆயர் ஆன்ட்ரூஸ்
தாழத்து தலைமையேற்று சிறப்பித்தார்.