புதிய அம்புரோசிய ரீதியின் வாசக நூல் . 17,நவம்பர், 08 .
மிலானிலுள்ள பேராலயத்தில் சென்ற சனிக்கிழமை மாலை திருவருகைக் காலம் கொண்டாடப்பட்டது .
வழிபாட்டை முன்னின்று நடத்திய கர்தினால் தியோனீஜி தெத்தமான்ஷி மிலான் திருச்சபையின் வழிபாட்டு
ஆண்டின் தொடக்கத்தில் புதிய வாசக நூலை வெளியிட்டார் . இது பற்றி சென்ற ஞாயிறு நண்பகல்
செப வேளையில் குறிப்பிட்ட திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட், இறைவாக்காலும், அதன் ஞானத்தாலும்
ஊட்டி வளர்க்கப்படும் அம்புரோசியத் திருச்சபை , எந்நாளும் வாய்மையிலும் , பிறரன்பிலும்
வாழவும் ,மனித மீட்பின் இறைவாக்காகிய கிறிஸ்துவுக்கு எல்லாக்காலத்திலும் தகுதியுள்ள சான்று
தருமாறும் இறை ஆசியை வேண்டினார்.