புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவுகிறது சிங்கப்பூர் திருச்சபை .16,நவம்பர்,08.
சிங்கப்பூர் கத்தோலிக்க உயர் மறைமாவட்டம் சமூக சேவையில் கவனம் செலுத்தி வருகிறது . கடந்த
நவம்பர் மாதம் 9400 புலம்பெயர்ந்தோர் வீடுகளில் பணி செய்யத் தேவைப்படும் பயிற்சிச் சான்றிதழ்
வழங்கப்பட்டனர் . அங்குள்ள அமல உற்பவ அன்னை ஆலயத்தில் இது வழங்கப்பட்டது . சிங்கப்பூர்
மறைமாவட்டம் தொழிற்பயிற்சியும் அளித்து , கணணி , ஆடை தயாரித்தல் , சிகை அலங்காரம் ஆகியவற்றோடு
ஆங்கில மொழிப்பயிற்சியும் வழங்குகிறது . தொழிற்பயிற்சி பெற்றவர்கள் சிங்கப்பூரில் பணி
வாய்ப்புப் பெறுவதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக புலம் பெயர்ந்தோர் நல வாழ்வை ஒருங்கிணைக்கும்
அதிகாரி கோனி பாங் என்ற அம்மையார் கூறியுள்ளார் .