அமைதியைச் சீர்குலைக்கும் வன்முறைகள் குறித்து கோங்கோ ஆயர்கள்
நவ.15,2008. கோங்கோவில் இடம்பெறும் வன்முறைகள், அதாவது "அமைதி இனப்படுகொலைகள்" உடனடியாக
நிறுத்தப்படவில்லையெனில் அதனைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் அமைதி சீர்கெடும் அபாயம்
இருப்பதாகக் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
இத்தகைய வன்முறைகளின்
முன்னிலையில் அரசு செயலற்று நிற்பதாகத் தோன்றுவதாக உரைக்கும் ஆயர்கள், சர்வதேச சமூகத்தின்
உதவிக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச்
சென்ற ஆயர்கள், மக்களைச் சந்தித்து அவர்களுடனான தங்கள் ஒருமைப்பாடை வெளியிட்டுத் திரும்பியுள்ளனனர்.