நவம்.13,2008. இலங்கையின் வடபகுதியில் போர் மேகம் அடர்ந்து காணப்படும் இவ்வேளையில் அங்கு
அவதியுறும் மக்களுக்கென இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்களைச் சுமந்து கொண்டு கப்பல்
புறப்பட்டுள்ளது. எனினும் மட்டக்களப்புப் பகுதியில் சண்டை முடிந்து அரசு நிர்வாகமும்
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியின் நிலை பற்றி அறிய திரிகோணமலை மட்டக்களப்புத்
துணை ஆயர் ஜோசப் பொன்னையா அவர்களைத் தொடர்பு கொண்டோம்