கோமா எனும் மயக்க நிலையில் இருந்த நோயாளி இறப்பதற்கு அனுமதி வழங்கிய இத்தாலிய நீதி மன்றத்தின்
தீர்ப்புக் குறித்து வத்திக்கான் திருப்பீடத்தின் நல வாழ்வு அமைப்பின் தலைவர் கர்தினால்
ஜாவியர் லொஷானோ பாரகான் வருத்தம் தெரிவித்தார் . இந்தத் தீர்ப்பு மனிதாபிமானமில்லாத ,
மிருகத்தனமானது என்று கூறினார் கர்தினால் ஜாவியர் . எழுவானா எங்கலாரோ விபத்தில் காயமுற்று
ஓராண்டு காலமாக மயக்க நிலையில் இருந்தார் . அவரது தந்தையார் அவர் இறப்பதற்கு நீதி மன்றத்தில்
அனுமதி கேட்டிருந்தார் .