ஈராக்கின் மோசூல் நகரில் நிலைமை மோசமடைகிறது . கிறிஸ்தவர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள்
. 13 நவ. 08 .
புதிய தாக்குதல்கள் தொடரும் எனக் கிறிஸ்தவர்கள் அஞ்சுகிறார்கள் . தேவையில் உள்ளோருக்குச்
சேவை என்ற கத்தோலிக்கத் தொண்டு நிறுவனம் , மோசூலில் வீட்டுக்குள் நுழைந்து இரண்டு பெண்கள்
இப்புதன்கிழமை கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும் ஒரு பெண் கவலைக்கிடமான நிலையில்
உள்ளாதகக் கூறப்பட்டுள்ளது . அங்கு உதவிக்கு வந்த காவலர்கள் மூவர் அங்கு வைக்கப்பட்ட
குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டுள்ளார்கள் . இந்த நிகழ்ச்சிகள் மக்களுக்கு பீதியை உண்டு
பண்ணியுள்ளது . பலர் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அரசு
பாதுகாப்புக் கொடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிகிறது .