பர்மா எல்லையில் கர்தினால் மார்த்தீனோ . 13,நவம்பர்,08.
பர்மாவின் எல்லையில் உள்ள புலம் பெயர்ந்தோர் முகாமை கர்தினால் ரெனாட்டோ மார்ட்டீனோ பார்வையிட்டார்
. திருச்சபை புலம் பெயர்ந்துள்ள மக்கள் துயர் துடைக்க முயன்று வருகிறது . அம்மக்களுக்கு
உதவிகள் மட்டும் போதாது . அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் வன்முறை சக்திகளை தடுக்க
வேண்டும் என கர்தினால் ரெனாட்டோ மார்ட்டீனோ கூறினார் . புலம் பெயர்ந்தோர் முகாம்களில்
இருப்பது கூண்டுப் பறவைகளைப்போல இருப்பதாகும் என்றும் , எங்கும் செல்லமுடியாது அடைபட்டுக்
கிடப்பதோடு , சுதந்திரத்தைப் பறிகொடுத்த நிலைமையில் உள்ளோம் என்றும் , முகாமிலேயே பிறந்து
, அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மூ சா பை என்ற 19 வயது இளைஞர் கூறியுள்ளார் . திருப்பீட
புலம் பெயர்ந்தோர் நல வாழ்வு மன்றத்தின் தலைவர் கர்தினால் மேதகு கர்தினால் ரெனாட்டோ மார்ட்டீனோவின்
வருகை முகாமில் உள்ளோரை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளதாகவும் பை கூறினார் . கர்தினால் மிக்க
பரிவும் கரிசனையும் காட்டியதாகவும் , அதற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும் மேலும்
பை என்பவர் தெரிவித்தார் .