2008-11-09 20:47:14

இலங்கை-தமிழ் விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுக்கு அழைப்பு .09 நவம்,08 .


இலங்கை அரசு தீவிரமாகத் தமிழர்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது . கிளிநொச்சியின் முக்கியமான தமிழ் விடுதலைப் புலிகளின் இடங்களை அரசுத் துருப்புக்கள் கைப்பற்றியுள்ளன . இலங்கை அரசு விமானத் தாக்குதலிலும் ஈடுபட்டு புலிகளின் கடற்படையையும் , பீரங்கிப் படையையும் தாக்கி வருகிறது . புலிகள் நார்வேயின் ஒப்புரவுப் பேச்சுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளனர் . நாங்கள் எப்பொழுதுமே அமைதிப்பேச்சையை விரும்பியுள்ளோம் என புலிகளின் திரு. நடேசன் கூறியுள்ளார் .அகில உலக நாடுகளும், இந்தியாவும் பொது மக்கள் தாக்கப்படுவது பற்றிக் கவலை தெரிவித்துள்ளன . அடுத்த வாரம் இலங்கையின் மகிந்தா இராஜபக்சா தமிழர்கள் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதுபற்றி இந்தியாவுக்குத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.