2008-11-06 20:36:59

மரண தண்டனையை ஒழிக்குமாறு தென் கொரியா நாட்டுத் தலைவருக்கு வேண்டுகோள் .06, நவம்பர் ,08 .


கடந்தவாரம தென் கொரியா நாட்டிற்குச் சென்ற கர்தினால் ரெனாட்டோ மார்ட்டீனோ தென் கொரியாவின் தலைவரைச் சந்தித்தார் . நாட்டின் பிரதமர் டானியேல் ஹான் சூங் சூ கத்தோலிக்க மறையைச் சேர்ந்தவர் . அச்சந்திப்பின் போது அந்நாட்டில் மரணதண்டனை விதிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார் கர்தினால் ரெனாட்டோ . பிரதமர் ஹான் சூங் சூ கர்தினாலின் வேண்டுகோளைக் கருத்தில் கொள்வதாகக் கூறியுள்ளார் எனக் கர்தினால் தெரிவித்தார் . இறுதியாக 1997 இல் அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது . கர்தினால் ரெனாட்டோ அந்நாட்டில் பயணம் மேற்கொண்டபோது பொது நிலைக் கிறிஸ்தவர்களைச் சந்தித்து 2004 இல் வெளிவந்த திருச்சபையின் சமூகக் கொள்கைத் திரட்டைச் செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.