இம்மாதம் 4 ஆம் தேதி , தென் ஆப்பிரிக்காவின் பிரெட்டோரியாவில் வத்திக்கான் திருப்பீடப்
பிரதிநிதி போட்ஸ்வானா குடியரசோடு ஒப்பந்தங்களைப் பறிமாற்றிக் கொண்டார் . செப்டம்பர் 30,
1966 லிருந்து போட்ஸ்வானா காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த குடியரசாக உள்ளது . இந்த ஆண்டு
ஏப்ரல் மாதத்திலிருந்து திரு. செரட்டீஸ் காமா நாட்டின் தலைவராக உள்ளார் . அங்கு 16 இலட்சம்
மக்கள் வாழ்கிறார்கள் . அந்நாட்டின் மொத்தப் பரப்பளவான 6 இலட்சம் சதுரக் கிலோமீட்டரில்
70 விழுக்காடு பகுதி பாலைவனமாகும் . அங்கு இலஞ்சமும் கையூட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
.