முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் பற்றிய கண்காட்சி வத்திக்கானில் நடக்கவுளள்ளது
. 04 நவ. 08 .
நவம்பர் மாதம் 4 தேதியிலிருந்து 6 தேதிவரை வத்திக்கானில் நடக்கும் இந்தக் கண்காட்சியில்
திருத்தந்தையின் அரிய எழுத்துப் படைப்புக்களும் , அவர் பயன்படுத்திய பொருட்களும், புகைப்படங்களும்
, கலைப் பொருட்களும் , வைக்கப்படவுள்ளன . இதனை வத்திக்கானின் வரலாற்று அறிவியல் கழகம்
நடத்துகிறது . இதே கண்காட்சி பின்னர் ஜெர்மனியின் பெர்லின் நகரிலும், அந்நாட்டின் பவேரியாவின்
மொனாக்கோவிலும் நடக்க உள்ளது . இந்த ஏற்பாட்டைச் செயல் படுத்த வத்திக்கான் மற்றும் இத்தாலி
மற்றும் சில மேலை நாட்டு நிறுவனங்களும் உதவிசெய்துள்ளன .