கத்தோலிக்கத் திருச்சபையோடு நல்லுறவும் சுற்றுப்புறப் பாதுகாப்புமே தங்களது முக்கியச்
செயல்திட்டங்களாக உள்ளன என எக்யூமெனிக்கல் பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயு கூறியுள்ளார்
. உலகத்தைக் காப்பது என்ற முயற்சியில் அடுத்த ஆண்டு ஆப்பிரிக்காவில் கருத்தரங்கு நடத்தத்
திட்டமிட்டிருக்கிறார் பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயு . உலக ஆயர்கள் மாமன்றத்தில் அக்டோபர்
18 இல் உரை நிகழ்த்த திருத்தந்தை அழைப்பு விடுத்திருந்தது தமது நெஞ்சத் தொட்ட நிகழ்ச்சி
எனவும் , அதனால் தாம் பெருமைப்படுத்தப்பட்டதாகவும் பிதாப்பிதா கூறினார் . அது மறக்க
முடியாத அனுபவம் எனத் தெரிவித்தார் பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயு . நாமெல்லோரும் ஒரு
நாள் இணைந்தே நற்கருணைத் திருவிருந்தை நிறைவேற்ற வேண்டும் என மேலும் பிதாப்பிதா முதலாம்
பர்த்தலோமேயு நம்பிக்கை வெளியிட்டார் . சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதும் அவசரத்தேவை என
அவர் தெரிவித்தார் .