ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்கூடத்துக்கு எதிராக வன்முறை நிகழும் என எச்சரிப்பு 03
நவ. 08.
ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் இராஞ்சியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை எரித்துவிடப்போவதாக
மீண்டும் மீண்டும் முகவரி தராத தொலைபேசியாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருப்பதாகத்
தெரிகிறது . பள்ளியை நடத்தும் அருள் சகோதரிகளை நேரில் சந்தித்தார் கர்தினால் டெலஸ்போரே
டோப்போ . அம்மாநில முதலமைச்சர் சிபு சோரன் இது பற்றிக் கூறும்போது கிறிஸ்தவர்களுக்கு
எதிராக பக்கத்து மாநிலத்தில் நடக்கும் வன்முறை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரவிட அவர் அனுமதிக்கப்
போவதில்லை என்று தெரிவித்துள்ளார் .