கர்தினால் நியூமனுக்கு விரைவில் முத்துப்பேறுபட்டம் .03 நவம்பர் ,08.
கர்தினால் நியூமனுக்கு பொது மக்கள் வணக்கம் செலுத்த நிகழ்த்தப்பட்ட திருப்பலிக்குப் பின்னர்
இங்கிலாந்தின் பர்மிங்காம் பேராயர் வின்செண்ட் நிக்கோலாஸ் கூறுகையில் திருச்சபை அவருக்கு
விரைவில் முத்துப்பேறுபட்டம் அளிக்கும் என்றார் . இந்த ஆண்டு முழுவதும் கர்தினால் நியூமனுக்கு
முத்துப்பேறு பட்டம் பற்றி வத்திக்கான் அறிவிக்கும் என வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது
. ஆனால் அக்டோபர் மாதத்தில் கர்தினால் பரிந்துரை செய்ததால் நிகழ்ந்ததாகக் கூறப்படும்
ஒரு அருஞ்செயல் பற்றி ஆய்வு செய்ய இறையியலார் கால அவகாசம் தேவைப்படும் எனக் கூறியுள்ளதாகப்
பர்மிங்காம் ஆரட்டரி தெரிவித்துள்ளது.