அஸ்ஸாம் மாநிலக் குண்டு வெடிப்பைக்கண்டிக்கிறது இந்திய ஆயர்கள் குழு .31 அக்டோபர் ,31
.
இந்த வாரம் வியாழன் அஸ்ஸாமில் நடந்த குண்டு வெடிப்பில் 70 பேர் இறந்துள்ளனர் . குண்டு
வெடிப்புக்கு இன்னும் எவரும் பொறுப்பேற்கவில்லை . இந்தத் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தை
இந்திய ஆயர்கள் குழு கண்டித்துள்ளது . இந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக்
குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. காயப்பட்டவர்களுக்கும் தம்
வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது .மத்திய அரசை இப்பாதகச் செயலுக்குக் காரணமானவர்களைக்
கண்டறிந்து தண்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது . இந்த வேதனை நிறைந்த வேளையில் துன்பங்களைத்
தாங்கிக் கொள்ள வேண்டிய அருளை ஆண்டவன் வழங்குமாறு பிரார்த்திப்பதாக இந்திய ஆயர்கள் குழு
தெரியப்படுத்தியுள்ளது.