கத்தோலிக்க திருச்சபையின் புதிய பக்தி இயக்கங்களைப் பாராட்டுகிறார் திருத்தந்தை .31
அக்டோபர், 08 .
வத்திக்கான் திருச்சங்கத்துக்குப் பிறகு திருச்சபையில் உருவாகியுள்ள பக்தி இயக்கங்கள்
திருச்சபைக்கு ஆண்டவர் அளிக்கும் விலை மதிப்பில்லாத, வன்மை வாய்ந்த வளங்கள் எனக் கூறினார்
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . அக்டோபர் 31 , இவ்வெள்ளிக்கிழமை தூய ஆவியின் அருங்கொடை
இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் திருத்தந்தையை அவரது மாளிகையில் சந்தித்தனர் .அவர்களிடம்
திருத்தந்தை இவ்வாறு கூறினார் . இப்படிப்பட்ட இயக்கங்கள் தூய ஆவியானவர் திருச்சபைக்கும்
, இன்றைய சமுதாயத்துக்கும் தரும் எழுச்சி மிக்க ஊற்றுக்கள் எனத் திருத்தந்தை கூறினார்
. ஆயர்கள் இத்தகு இயக்கங்களை வரவேற்க வேண்டும் எனத் திருத்தந்தை மேலும் கூறினார் . இந்த
இயக்கங்கள் அவற்றின் உண்மை நிலையை உணர திருச்சபை அவற்றை ஆய்வு செய்து மெய்ப்பொருள் காண
முன் வரவேண்டும் எனத் திருத்தந்தை அறிவுறுத்தினார் .