பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காரித்தாஸ் தொண்டு நிறுவனம்
உதவி . 30 அக். 08.
இப்புதன் காலை பாகிஸ்தானில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கத்தால் 170 பேர் இறந்துள்ளனர் .
சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பலூசிஸ்தான் பகுதியில் காரித்தாஸ் உடனடியாக
மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பூமி அதிர்ந்துள்ளது
. பாதிப்பைக் கணித்துவருவதாகவும் . தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் காரித்தாஸின் அவசரக்
கால உதவிப் பணி இயக்குநர் தோலோரஸ் ஹால்பின் பாக்மன் கூறினார் . பாகிஸ்தானின் 17 கோடியே
30 இலட்சம் மக்களில் 95 விழுக்காடு மக்கள் இஸ்லாமியர்கள் .