2008-10-24 19:23:48

 இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மறைமாவட்டத்துக்குப் புதிய ஆயர் . 24 அக்டோபர் .08


இந்தூரின் ஆயர் மேதகு ஜார்ஜ் அனத்தில் அவரது விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதால் , அவருக்குப் பதிலாக மேதகு சாக்கோ தொட்டுமரிக்கல் அங்கு ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் ஜூன் மாதம் 2002 லிருந்து மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மறைமாவட்ட ஆயராக இருந்து வருகிறார் . இறை வார்த்தை சபையைச் சேர்ந்த இவர் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி , 1947 இல் பிறந்தவர் . 79 இல் குருப்பட்டம் பெற்றுள்ளார் . ஜுன் மாதம் 7 , 2002 ல் மத்தியப்பிரதேசத்தின் ஜாபுவா மறைமாவட்ட ஆயராகப் பணி ஏற்றிருக்கிறார் .








All the contents on this site are copyrighted ©.