திருத்தந்தையின் அனைத்து நூற்களையும் வெளியிட ஏற்பாடு .22 அக்டோ.08.
ஜெர்மனியின் மாபெரும் பதிப்பகமாகிய ஹெர்டர் வெளியீட்டாளர்கள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின்
அனைத்து நூற்களையும் அடுத்த எட்டு ஆண்டுகளில் வெளியிட உள்ளனர் . இதனை ரீகன்ஸ்பர்க்கில்
உள்ள திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் நிலையம் செயல்படுத்த உள்ளது. 16 பிரிவு ஏடுகளாக வெளிவர
உள்ள நூற்களின் முதல் நூலை ரீகன்ஸ்பர்க் ஆயர் ஜெரார்டு முல்லர் அக்டோபர் 22 இல் வெளியிடும்போது
திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இதற்குச் சம்மதம் அளித்துள்ளதாகவும் , அந்நூற்களில் அவருடைய
பிறப்புப் பெயர் பொறிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாதகக் கூறினார். 2005 ஆம் ஆண்டுக்கு
முன்னர் திருத்தந்தை புதுப் பணியினை ஏற்கும் முன்னர் அவை எழுதப்பட்டதாகத் திருத்தந்தை
மேலும் தெரிவித்துள்ளார் .