2008-10-21 18:36:52

கிறிஸ்தவத் துறவியரை விஷ்வ இந்துத் தீவிரவாதிகள் தாக்கினர். 21, அக். 08.


இந்திய மறைபரப்புச் சபையின் நான்கு உறுப்பினர்களை வி.எச்.பி. தீவிரவாதிகள் சாலையில் வழிமறித்து சென்ற ஞாயிறன்று தாக்கியுள்ளனர். அந்த நான்கு நவதுறவியரும் அவர்கள் வழக்கப்படி தூய வளனார் ஆசிரமத்திலிருந்து சென்னாகொலி கிராமத்தில் காப்பித்தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது கொடகு மாவட்டத்தின் கோனிக்கொப்பாவுக்கு அருகில் சாலையில் தாக்கப்பட்டனர். அப்பகுதியில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடு்ம் வி.எச்.பி இயக்கத்தலைவரோடு சில தீயவர்கள் சேர்ந்துகொண்டு நவசந்நியாசத்தில் இருக்கும் இவர்களைத் தாக்கியதில் அவர்கள் காயமுற்றுள்ளனர் . நவதுறவியர் தலைவரும் வேறு இரு குருக்களும் அவர்கள் உதவிக்கு வந்துள்ளனர் . வழக்குப் பதியப் பட்டுள்ளதாகவும் , தீவிர வாதிகள் தரப்பில் பொய் வழக்கு ஒன்று அவர்களுக்குச் சொந்தமான காப்பித் தோட்டத்தில் அத்து மீறி நுழைந்ததாகவும் தொடரப்பட்டுள்ளது . அப்பகுதியில் அமைதிப்பேரணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.