உலக ஆயர்கள் மாமன்றக்கருத்தரங்கில் கொலம்பஸ் வீரர் தலைவர். 21 அக்.-08.
அமெரிக்காவின் கொலம்பஸ் வீரர் இயக்கம் எனும் தொண்டு நிறுவனத்தின் உயர் தலைவர் கார்ல்
ஆல்பர்ட் ஆண்டர்ஸன் உலக ஆயர்கள் மாமன்றத்தில் அவரது கருத்தை வெளியிட்டார் .கொலம்பஸ் வீரர்கள்
இயக்கம் செபமாலைப் பக்தியையும் மரியன்னை மன்றாட்டையும் பிரபலப்படுத்தி வருகிறது . பழம்
பெரும் பக்தி முயற்சியான செபமாலையைச் செபிக்கும்போது இறைவாக்கைத் தியானிக்கும் வழக்கம்
குருக்கள் பற்றாக் குறையாக உள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நல்ல பலனைத் தருவதாக அவர்
கூறியுள்ளார் . இறைவாக்கைப் பெற்றுப் பயனடைவதற்கு நல்ல மாதிரியாக இருக்கும் அன்னை மரியாளைப்
பற்றி நாம் ஆழமாகத் தெரிந்து கொளவதற்கு இது வழியாகும் என்றும் கார்ல் ஆண்டர்ஸன் கூறினார்
. கர்தினால் குவெல்லத் கூறியுள்ளபடி நாமும் அன்னையைப் போல ஆக்கப்பூர்வமாகவும் , உரையாடல்
வழியாகவும் , மனத் தியானம் வழியாகவும் இறைவாக்குக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் எனக்
காட்டலாம் எனவும் கூறினார் கார்ல் ஆண்டர்ஸன் . கிறிஸ்தவர்கள் மறைக்கல்வியினை ஆழமாகப்
பெற வழிசெய்ய வேண்டும் எனவும் , இறைவாக்கை உய்த்துணர உயர் கல்வி பெற வேண்டும் எனவும்
அவர் மேலும் வலியுறுத்தினார் .