2008-10-21 20:18:23

உலக ஆயர்கள் மாமன்றக்கருத்தரங்கில் கொலம்பஸ் வீரர் தலைவர். 21 அக்.-08.


அமெரிக்காவின் கொலம்பஸ் வீரர் இயக்கம் எனும் தொண்டு நிறுவனத்தின் உயர் தலைவர் கார்ல் ஆல்பர்ட் ஆண்டர்ஸன் உலக ஆயர்கள் மாமன்றத்தில் அவரது கருத்தை வெளியிட்டார் .கொலம்பஸ் வீரர்கள் இயக்கம் செபமாலைப் பக்தியையும் மரியன்னை மன்றாட்டையும் பிரபலப்படுத்தி வருகிறது . பழம் பெரும் பக்தி முயற்சியான செபமாலையைச் செபிக்கும்போது இறைவாக்கைத் தியானிக்கும் வழக்கம் குருக்கள் பற்றாக் குறையாக உள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நல்ல பலனைத் தருவதாக அவர் கூறியுள்ளார் . இறைவாக்கைப் பெற்றுப் பயனடைவதற்கு நல்ல மாதிரியாக இருக்கும் அன்னை மரியாளைப் பற்றி நாம் ஆழமாகத் தெரிந்து கொளவதற்கு இது வழியாகும் என்றும் கார்ல் ஆண்டர்ஸன் கூறினார் . கர்தினால் குவெல்லத் கூறியுள்ளபடி நாமும் அன்னையைப் போல ஆக்கப்பூர்வமாகவும் , உரையாடல் வழியாகவும் , மனத் தியானம் வழியாகவும் இறைவாக்குக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் எனக் காட்டலாம் எனவும் கூறினார் கார்ல் ஆண்டர்ஸன் . கிறிஸ்தவர்கள் மறைக்கல்வியினை ஆழமாகப் பெற வழிசெய்ய வேண்டும் எனவும் , இறைவாக்கை உய்த்துணர உயர் கல்வி பெற வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார் .








All the contents on this site are copyrighted ©.