2008-10-20 17:17:16

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஸ்ரயேல் நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொள்ள மீண்டுமொருமுறை அழைப்பு - இஸ்ரயேல் அரசுத்தலைவர்


அக்.20,2008 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஸ்ரயேல் நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென மீண்டுமொருமுறை நேற்று இஸ்ரயேல் அரசுத்தலைவர் ஷிமோன் பேரெஸ் அழைப்புவிடுத்தார்.

நாத்ஸி கொடுமைகளால் உயிரிழந்த யூதர்களின் நினைவு அருங்காட்சியகமான யாத் வாஷெம் இல்லத்தில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் குறித்து வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் திருத்தந்தையின் திருப்பயணத்திற்கு ஒரு தடையாக இருக்காது என நம்புவதாகவும் இஸ்ரயேல் அரசுத்தலைவர் கூறினார்.

புனித பூமிக்கான திருப்பயணம் கோபம் மற்றும் முரண்பாடுகலோடு எவ்வகையிலும் தொடர்புடையதல்ல, அம்மண் எப்போதும் புனிதம் ஆகவே திருத்தந்தையின் திருப்பயணத்தை வரவேற்பதாக அரசுத்தலைவர் ஷிமோன் பேரெஸ் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.