2008-10-20 17:56:42

கிறிஸ்தவர்கள் சார்பாக ஈராக்கியர்கள் ஆர்ப்பாட்டம் . 20 அக். 08 .


வட ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துவருவதற்கு ஏறத்தாழ 200 ஈராக்கியர்கள் கிர்க்குக் நகரில் ஒன்று கூடி அவர்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர் . குர்த் இனத்தவரால் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இப்போராட்டம் கிர்க்குக் மாநிலத்தின் மிகப் பெரிய கோவில் அருகே இந்த ஞாயிறு அன்று நடந்தது. சன்னி இஸ்லாமியர்களால் மோசூல் நகரில் அண்மைக் காலங்களில் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். இம்மாதத்தில் மட்டும் மோசூல் நகரிலிருந்து ஏறத்தாழ பத்தாயிரம் கிறிஸ்தவர்கள் வெளியேறியுள்ளதாக ஈராக்கின் அதிகாரிகள் கூறியுள்ளார்கள் .








All the contents on this site are copyrighted ©.