போரிடும் குழுக்கள் மனித வாழ்வை மதிக்க வேண்டும் – இலங்கை ஆயர்கள்
அக்.18,2008. பழமையான புத்த நகரமான அனுராதபுரத்தில் இடம் பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புத்
தாக்குதலில் 31 பேர் இறந்துள்ளவேளை, இலங்கையில் போரிடும் குழுக்கள் மனித வாழ்வை மதிக்க
வேண்டும் என்று அனுராதபுர ஆயர் நார்பெர்ட் அத்ராதி வலியுறுத்தினார்.
இந்த குண்டுவெடிப்பு
வன்முறைத் தாக்குதலில் பலியானவர்களின் அடக்கச் சடங்கில் கலந்து கொண்ட பல்வேறு மதத்தினருக்கு
மறையுரையாற்றிய ஆயர், இதில் யார் கொல்லப்படுகிறார்கள் என்ற வேறுபாடில்லாமல் விலைமதிப்பற்ற
மனித உயிர்கள் பலியாகின்றன என்றுரைத்தார்.
இலங்கையில் பல ஆண்டுகளாக இடம் பெற்று
வரும் இனச்சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் விடுதலைப்புலிகள் மீது கடுமையான
தாக்குதலை நடத்தி வருகின்றது இலங்கை இராணுவம்.