2008-10-16 19:11:30

திருத்தந்தையை ஈக்வடோர் ஆயர்கள் சந்தித்தனர் .16 அக்டோபர் 08.


ஈக்வடோர் நாட்டின் ஆயர்குழு வழக்கமான அத்லீமினாவுக்காக திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டை அவரது வத்திக்கான் திருப்பீட இல்லத்தில் சந்தித்தனர் . திருத்தந்தை அவர்களை வாழ்த்தி வரவேற்றார் . அதுபோது திருத்தூதர் பேதுரு கொடுத்துள்ள கட்டளை யாதெனின் உம் சகோதரர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துக என்பதாகும் . அக்கட்டளையை நான் உங்களைச் சந்திப்பதில் நிறைவேற்றுகிறேன் எனக்கூறினார் திருத்தந்தை . ஈக்வடோர் நாட்டின் ஓய்வு பெற்ற கர்தினால் அந்தோனியோ ஜோஸ் கொண்சாலஸ் மறைவுக்கு வருத்தமும் அனுதாபமும் தெரிவித்தார் திருத்தந்தை . ஈக்வடோர் நாட்டு ஆயர்கள் குழுவின் தலைவர் அரெகுயி யார்ஷா தொடக்கத்தில் வழங்கிய வாழ்த்துரைக்கு நன்றி கூறினார் திருத்தந்தை . உங்களுடைய தேவைகளை மனதில் கொண்டுள்ளேன். தாராள மனத்தோடு உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களுக்கு இறைப்பணி செய்கவென்று வேண்டுகோள் வைத்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.