அக்.16,2008. அக்டோபர் ஐந்தாம் தேதியிலிருந்து வத்திக்கானில் 12 வது உலக ஆயர்கள் மாமன்றம்
நடைபெற்று வருகிறது. விவிலியத்தை மையமாக வைத்து நடைபெறும் இம்மாமன்றத்தில் 253 பேரவைத்
தந்தையர்கள் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் தமிழர்கள் என்று, திருச்சி ஆயர் மேதகு ஆன்டனி
டிவோட்டா அவர்களும் இலங்கையின் மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இம்மாமன்றம் பற்றி திருச்சி ஆயரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் பேசுகிறார்.