ஈராக்கின் மொசூலில் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கு பிரதமர் முயற்சி
அக்.14,2008. ஈராக்கின் மொசூலில் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கென அவசரகால குழு ஒன்றை
அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.
ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கி தலத்திருச்சபை
பிரதிநிதிகளைச் சந்தித்தபோது மொசூலில் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.
மொசூலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறையினரைப் பணியில் அமர்த்துவது,
அந்நகர் காவல்துறை அதிகாரியின் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை உருவாக்குவது ஆகிய திட்டங்களையும்
பிரதமர் அறிவித்தார்.
மொசூலில் சுமார் 14 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு
கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கான சிறுபான்மைக் குடும்பங்கள்
வெளியேறியுள்ளன