2008-10-08 15:37:48

பாப்புவா நியு கினி பிரதமர், திருத்தந்தை, சந்திப்பு


செப்.08,2008. பாப்புவா நியு கினி பிரதமர் மைக்கிள் சொமாரெயை இன்று பொது மறை போதகத்திற்குப் பின்னர் சந்தித்த திருத்தந்தை உலக வெப்ப நிலை மாற்றத்தின் விளைவுகள், பாப்புவா நியு கினி நாட்டிற்கு அருகிலுள்ள நாடுகளுடன் அந்நாடு கொண்டுள்ள உறவு உட்பட சில காரியங்களைக் கலந்து பேசினார்.

பாப்புவா நியு கினி நாட்டின் தற்போதைய அரசியல் - சமூக சூழல், கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டில் ஆற்றி வரும் கல்விப்பணி, மனித முன்னேற்றப்பணி, நலவாழ்வுப்பணி போன்றவைகள் பற்றியும் இரு தலைவர்களும் கலந்து பேசினர் என்று திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.