இத்தாலியில் குடியேற்றதாரர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைகளுக்கு சான் எஜிதியோ அமைப்பு
கண்டனம்
அக்.06,2008. இத்தாலியில் வெலிநாட்டவர்க்கு எதிராக இடம் பெறும் வன்முறைகள் குறித்து சான்
எஜிதியோ அமைப்பு தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இத்தாலியின் முக்கிய
நகரங்களான மிலான், நேப்பிள்ஸ், பார்மா மற்றும் உரோமையில் இடம் பெற்ற அண்மைத் தாக்குதல்கள்
குறித்து கவலையை வெளியிட்ட இக்கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, அதிகாரத்திலிருப்போர் குடியேற்றதாரர்களுக்கு
எதிராக வெளியிடும் கருத்துக்களை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
சகிப்பற்ற
தன்மைகளினால் இடம் பெறும் வன்முறைகளுக்காக இத்தாலியர்கல் சார்பில் மன்னிப்பை வேண்டுவதாகவும்
கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான சான் எஜிதியோ தனது அறிக்கையில் கூறியுள்ளது.