வியட்நாம் பிரதமரோடு அங்குள்ள ஆயர்கள் சந்திப்பு .031008.
வியட்நாமில் அரசுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையேயான உறவு பதட்டமான நிலையில் இருப்பதாக
அங்குள்ள ஆயர்களின் பிரதிநிதிகள் வியட்நாம் பிரதமர் நியூயெனிடம் கூறியுள்ளனர் . அபகரித்த
திருச்சபையின் சொத்துக்களைத் திருப்பித் தரமுடியாது என அரசு கூறியுள்ளது ஆயர்களுக்கு
அதிர்ச்சியைத் தந்துள்ளது .ஹனாய்ப் பேராயரை அரசு அவதூறாகப் பேசி வருவதோடு அங்குள்ள பங்கில்
கிறித்தவர்களுக்கு அவர்கள் உடைமைகளைச் சேதப்படுத்தி தொல்லை கொடுத்து வருகிறது . ஹனாய்ப்
பேராயரின் இல்லமும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது .