கொலம்பஸ் வீரர்களின் இயக்கக்குழுவை வரவேற்றுப் பேசினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.
031008.
03 ,அக்டோபர் வெள்ளி காலையில் கொலம்பஸ் வீரர்களின் அமைப்பின் இயக்குநர்கள் குழு திருத்தந்தையை
அவருடைய வத்திக்கான் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அவர்களை வரவேற்ற திருத்தந்தை கொலம்பஸ்
வீரர் குழுவை நிறுவிய வணக்கத்துக்குரிய மைக்கிள் மகிவினி நற்செய்தியை இவ்வுலகுக்குப்
புளிக்காரமாகவும் திருச்சபையை புனிதத்திலும் நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்திலும் புதுப்பிக்கும்
சக்தியாகவும் இருக்க இக்குழுவைத் தொடங்கினார் , என்றார் திருத்தந்தை. திருத்தந்தையின்
அமெரிக்கப் பயணத்தின் போது திருத்தந்தை கூறியபடி இறைமக்கள் அனைவரும் புனிதத்தில் வளரவும்
திருச்சபையின் நற்செய்திப்பணியில் ஆர்வத்தோடு பங்கேற்கவும் வேண்டும் எனக் கூறினார் .
இளைஞர்களை இறைப்பற்றில் வேரூன்றி வளர ஆற்றும் உதவிகளுக்கும் நன்னெறிகளைப் பாதுகாத்து
விடுதலை பெற்ற நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் கொலம்பஸ் வீரர்கள் எடுக்கும் முயற்சிகளைப்
பாராட்டி அவர்கள் அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம்
பெனடிக்ட் .