அக்.01,2008. பிரசில் நாட்டின் ராணுவ சர்வதிகார ஆட்சிக்காலத்தின்போது சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்கு
இழப்பீட்டுத்தொகை வழங்க உள்ள அரசின் திட்டத்திற்கு தங்கள் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்
பிரசில் ஆயர்கள்.
இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுவது மட்டுமல்ல, சர்வதிகார ஆட்சியின்
அத்துமீறல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படுவதுடன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
எனவும் ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.