நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு நிதிச் சந்தைக்கு உதவ ஆயர்கள்
ஐந்து பரிந்துரைகளை முன்வைக்கின்றனர்
செப்.30,2008. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு நிதிச் சந்தைக்கு
உதவுவதற்கான வழிகளை அரசு ஆராய்ந்து வரும் வேளை, அந்நாட்டு ஆயர்கள் அரசுக்கு உதவியாக ஐந்து
பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும்
மனிதவள ஆணையத் தலைவர் ஆயர் வில்லியம் மர்ப்பி அரசுத் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்
நெருக்கடியில் சிக்கியுள்ள நிதி சந்தைக்கு உதவுவதற்கான ஆயர்களின் பரிந்துரைகளைக் குறிப்பிட்டுள்ளார்.
விசுவாசமும்
நன்னெறி கோட்பாடுகளும் நீதியும் உறுதியும் நிறைந்த தீர்வைக் காண்பதற்கு உதவும் என்று
குறிப்பிட்டுள்ள ஆயரின் கடிதம், பொருளாதார அமைப்புகளும் பொருளாதாரத் திட்டங்களும் நெருக்கடிகளுக்கான
தீர்வுகளும் மனித வாழ்வையும் மனித மாண்பையும் பாதுகாப்பதற்கான அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருக்க
வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
பொருளாதாரத்தில் அதிக நன்மைகளைப் பெறுவதற்காக
துர்மாதிரிகையான வழிகளைத் தேடுவது பிற மதிப்பீடுகளைவிட பொருளாதார ஆதாயத்தையே முன்னிறுத்தும்
ஒரு பொருளாதார துர்மாதிரிகைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றது என்றும் ஆயரின் கடிதம்
கூறுகின்றது.
மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் அவை, அமெரிக்க அரசின் 700 பில்லியன்
டாலர் மீட்புத்திட்டத்தை நிராகரித்துள்ளது