மேதகு அருள் தந்தை வைடோட்டாஸ் கஸ்லோகாஸ் காலமானார் .2809.
அருள் தந்தை வைடோட்டாஸ் லித்துவேனியா நாட்டினர் . அவர் 89 வயதில் லித்துவேனியாவின் கவுனாஸ்
என்ற நகரில் காலமானார் . கம்யூனிசம் அடக்குமுறை ஆட்சியைக் கொண்டு கிறிஸ்தவத்தை துன்புறுத்திய
காலக்கட்டத்தில் 1940 லிருந்து 1988 வரை தந்தை வைடோடாஸ் லித்துவேனிய மொழியில் வத்திக்கான்
வானொலி வழியாக செய்திகளை ஒலி பரப்பி வந்த பெருமைக்குரியவர் . 1989 லிருந்து அவர் பிறந்த
இடத்தில் கருணை இல்லம் தொடங்கி 100 அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்து இறுதிவரை பணிசெய்து
கொண்டிருந்தார் . வத்திக்கான் வானொலியின் பாது்காவலர் அதிதூதர் தூய கபிரியேல் வானதூதரின்
விழா நாளாகிய செப்டம்பர் 29 ல் அவரது நல்லடக்கம் கவுனாஸ் நகரில் நடைபெறும் என வத்திக்கான்
செய்திச் சேவை அறிவித்துள்ளது .